×

சட்டீஸ்கர் புதிய முதல்வர் நாளை பதவி ஏற்பு: பிரதமர் மோடிபங்கேற்கிறார்

ராய்ப்பூர்; சட்டீஸ்கர் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலத்திற்கு நடந்த தேர்தலில் பா.ஜ 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் ஒருவார இடைவெளிக்கு பிறகு புதிய முதல்வராக விஷ்ணுதேவ் சாய் தேர்வு செய்யப்பட்டார். பழங்குடியினத்தை சேர்ந்த அவர் நாளை பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டீஸ்கரில் முதல்வர் உள்பட 13 அமைச்சர்கள் பதவி ஏற்கலாம். நாளை நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ராய்ப்பூர் அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா மற்றும் பா.ஜ முதல்வர்கள் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சட்டீஸ்கர் புதிய முதல்வர் நாளை பதவி ஏற்பு: பிரதமர் மோடிபங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,chief minister ,PM Modi ,Raipur ,Vishnu Dev Sai ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…